ஸௌம்யா பிறந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன - இப்போதுதான் பிறந்தாள் போலத் தோன்றுகிறது, அதற்குள்ளாகவே இரண்டு ஆண்டுகளா!?
Sowmya, Birthday அவளது முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் இங்கே படிக்கவும்.
குழந்தையின் இரண்டாம் பிறந்த நாளை நேற்று (17 மே 2008) அடையாறில் (காயத்ரியின் அப்பா-அம்மா வீட்டில்) மிக விமரிசையாக் கொண்டாடினோம்.
நான், விஜயா, கிருத்திகா, அதிதி, சாவித்திரி, ரமேஷ், கார்த்திக் ஆகியோர் எங்கள் வீட்டிலிருந்து மாலை 5-45க்குக் கிளம்பிப் போனோம். அர்விந்த் அமெரிக்கா சென்றுள்ளான்; அஷோக், நீரஜா வரவில்லை. GBS பக்கத்திலிருந்து சுமார் 20 பேர் இருந்தனர்.
மாலை 6-30க்கு ஸௌம்யா கேக் வெட்டினாள். பெரிய கேக், அருண் தனது ஹோட்டலிலிருந்து ஆர்டர் செய்திருந்தான். அதிதிக்கும் கேக் வெட்ட ஒரே ஆசை! (அடுத்த மாசம் அவளது பிறந்த நாள் வருகிறது.) காயத்ரியின் அம்மா சாம்பார் சாதம், தயிர் சாதம், கோஸ் கறி, பருப்பு வடை செய்திருந்தாள். ஹோட்டலிலிருந்து அருண் காரட் ஹல்வா வாங்கி வந்திருந்தான்; விஜயா அஷோகா ஹல்வா செய்தாள்.
ஸௌம்யாவிற்கு எங்கள் பரிசாக ஒரு காது-வ்ளையம் வாங்கினோம்; 2.25 கிராம் தங்கம்; விலை 3000.00 ஆயிற்று. (அதிதியோடது 2900.00 ஆயிற்று).
இரவு 9-45க்கு நாங்கள் வீடு திரும்பினோம்; இவ்வாறாக, ஸௌம்யாவின் 2-ஆம் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினோம். குழந்தையின் தமிழ் நட்சத்திர (பூராடம்) பிறந்த நாள் மே 24-ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது.
(போட்டோக்கள் விரைவில்.)
ராஜப்பா
11:15 18-05-2008
Sunday, May 18, 2008
Friday, May 09, 2008
என்ன ஒரு அழகான பேச்சு !
What a sweet talk By Aditi and Sowmya !
ஸௌம்யாவும் அதிதியும் மழலையில் கொஞ்சுவதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் (இங்கே படிக்கவும்).
தற்போது இரண்டு குழந்தைகளுமே மிகவும் சரளமாக, கோர்வையாக, முழு முழு வாக்கியங்களாக் பேசி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார்கள். அதுவும் 4, 5 வாக்கியங்களைத் தொடர்ந்து பேசுகிறார்கள்.
நாம் எது சொன்னாலும் உடனே பிடித்துக் கொண்டு விடுகிறார்கள். அனுமார் வால் போல இடைவிடாத கேள்விகள் - "இது என்ன? நீ என்ன பண்ணறே? என்ன மாத்தரே (மாத்திரை tablet) சாப்பிடறே? ஆர் குடுத்தா? எந்த டாக்டர் மாமா குடுத்தா?" இதுபோன்று கேள்விகளுக்கு முடிவே கிடையாது.
காலை எழுந்து குளித்ததும், ஸ்வாமிக்கு முன் நின்று, "கஜாநநம் பூத கணாதி சேவிதம் ---" மற்றும் "மூஷிக வாகன மோதக ஹஸ்த --" மறக்காமல் முழுதும் சொல்லிவிடுவார்கள். "அகர முதல எழுத்தெல்லாம் -- " இதுபோன்ற சில குறள்கள் கூடத் தெரியும். "சஷ்டியை நோக்க சரவண பவனாம் -- " கற்றுக்கொண்டு வருகிறார்கள்.
அதிதிக்கும், ஸௌம்யாவிற்கும் இன்னும் இரண்டு வயசு கூட ஆகவில்லை. ஆண்டவன் குழந்தைகளை ஆசிர்வதிக்கட்டும்.
ராஜப்பா
7-45PM, 09-05-2008
ஸௌம்யாவும் அதிதியும் மழலையில் கொஞ்சுவதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் (இங்கே படிக்கவும்).
தற்போது இரண்டு குழந்தைகளுமே மிகவும் சரளமாக, கோர்வையாக, முழு முழு வாக்கியங்களாக் பேசி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார்கள். அதுவும் 4, 5 வாக்கியங்களைத் தொடர்ந்து பேசுகிறார்கள்.
நாம் எது சொன்னாலும் உடனே பிடித்துக் கொண்டு விடுகிறார்கள். அனுமார் வால் போல இடைவிடாத கேள்விகள் - "இது என்ன? நீ என்ன பண்ணறே? என்ன மாத்தரே (மாத்திரை tablet) சாப்பிடறே? ஆர் குடுத்தா? எந்த டாக்டர் மாமா குடுத்தா?" இதுபோன்று கேள்விகளுக்கு முடிவே கிடையாது.
காலை எழுந்து குளித்ததும், ஸ்வாமிக்கு முன் நின்று, "கஜாநநம் பூத கணாதி சேவிதம் ---" மற்றும் "மூஷிக வாகன மோதக ஹஸ்த --" மறக்காமல் முழுதும் சொல்லிவிடுவார்கள். "அகர முதல எழுத்தெல்லாம் -- " இதுபோன்ற சில குறள்கள் கூடத் தெரியும். "சஷ்டியை நோக்க சரவண பவனாம் -- " கற்றுக்கொண்டு வருகிறார்கள்.
அதிதிக்கும், ஸௌம்யாவிற்கும் இன்னும் இரண்டு வயசு கூட ஆகவில்லை. ஆண்டவன் குழந்தைகளை ஆசிர்வதிக்கட்டும்.
ராஜப்பா
7-45PM, 09-05-2008
Saturday, May 03, 2008
அதிதி சலூனுக்குப் போகிறாள்
Aditi's First Hair Cut
அதிதியின் தலைமுடி எக்கச்சக்கமாக வளர்ந்துள்ளது. சென்னையின் கோடை வெப்பத்தில் குழந்தைக்கு இன்னும் அதிகமாக வேர்த்து விடுகிறது.
மே மாதம் (2008) 2-ஆம் தேதி காலை அவளைக் கூட்டிக்கொண்டு அர்விந்த் சலூனுக்குப் போனான். முதல் முறையாக அதிதி தலைமுடி வெட்டிக்கொண்டாள். (அவள் அம்மா வெட்டி விட்டதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை). நிறய்ய அழவில்லை.
எதிர்பார்த்தது போலவே அதிதியின் முகம் மாறிவிட்டது, ஆனால் ரொம்ப மாறவில்லை. போட்டோக்களை பாருங்கள்.
Before Haircut
after 
Aditi, Haircut
ராஜப்பா
7-15PM 3-5-2008
அதிதியின் தலைமுடி எக்கச்சக்கமாக வளர்ந்துள்ளது. சென்னையின் கோடை வெப்பத்தில் குழந்தைக்கு இன்னும் அதிகமாக வேர்த்து விடுகிறது.
மே மாதம் (2008) 2-ஆம் தேதி காலை அவளைக் கூட்டிக்கொண்டு அர்விந்த் சலூனுக்குப் போனான். முதல் முறையாக அதிதி தலைமுடி வெட்டிக்கொண்டாள். (அவள் அம்மா வெட்டி விட்டதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை). நிறய்ய அழவில்லை.
எதிர்பார்த்தது போலவே அதிதியின் முகம் மாறிவிட்டது, ஆனால் ரொம்ப மாறவில்லை. போட்டோக்களை பாருங்கள்.
Aditi, Haircut
ராஜப்பா
7-15PM 3-5-2008
Subscribe to:
Posts (Atom)
