Showing posts with label Arun. Show all posts
Showing posts with label Arun. Show all posts

Saturday, April 19, 2008

பேரன் புண்யாஹ வசனம் SRIRAM PUNYAHA VACHANAM

எங்கள பேரனின் புண்யாஹ வசனம் ஏப்ரல் 17 (2008) வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடந்தேறியது.

குழந்தைக்கு ஸ்ரீராம் (SRIRAM) என்று பெயர் வைத்துள்ளோம். அழகான பெயர்.

காலை 8 மணிக்கே நானும் விஜயாவும் அடையாறு சென்று விட்டோம். காப்பரிசி பண்ணி எடுத்துக் கொண்டு போனோம். அங்கு யாவரும் - ஸௌம்யா உள்பட - குளித்து தயாராக இருந்தனர். ஜெயராமன், கல்யாணி


முதலில் வந்தனர். பூர்ணிமாவை வீட்டிலேயே விஜய் துணையுடன் விட்டுவிட்டு வந்தனர் - இதுவே முதல் தடவை. பின்னர் சரோஜாவும் அத்திம்பேரும் வந்தனர். 9-15 க்கு வாத்தியார் வந்தார், புண்யாஹவசனத்தை ஆரம்பித்தார்.

9-30க்கு அதிதி, கிருத்திகா, மாமா, மாமி வந்தனர். (மங்களம், பத்மா வரவில்லை. சுகவனம், சுதா பூனா சென்றுவிட்டனர். அர்விந்த் பாங்காக் சென்றுள்ளான். அஷோக், நீரஜாவும் வரவில்லை). காயத்ரி அம்மா வழியில் அக்கா, அத்திம்பேரை தவிர வேறு யாரும் வரவில்லை. எல்லாரும் ராம நவமிக்காக் துறையூர் சென்று விட்டனர். அப்பா வழியில் வந்திருந்தனர். மொத்தம் 35 - 40 பேர் இருந்திருப்போம். கூட்டம் குறைவுதான் - ஸௌம்யாவின் புணயாஹவசனத்தின் போது (27 May 2006) 100 -120 பேர் என ஜேஜே என்றிருந்தது.


அதிதியும், சௌம்யாவும் புதுப் புது டிரெஸ் போட்டுக்கொண்டனர். தம்பிப் பாப்பாவை சுற்றி சுற்றி வந்தனர் - ஆனால், அவன் தூங்கிக் கொண்டே இருந்தான்.

குழந்தையும் அப்பாவும் (ARUN) ஒரே நட்சத்திரத்தில் (அஸ்வினி) பிறந்திருப்பதால் "ஏக நட்சத்திர ஹோமம்" செய்தார்கள். குழந்தைக்கு நாங்கள் ஒரு தங்க செயின் (8.4 கிராம் @ 1115.00) வாங்கினோம்.

அர்விந்த், அஷோக்கும் செலவில் பங்கு கொண்டனர். வெள்ளிக்காப்பு, தங்கக்காப்பு பழசுதான், ஸௌம்யாவிற்கு வாங்கியது. முக்காப்பு மட்டும் புதுசாக வாங்கினோம். டிரெஸ் நிறைய வாங்கினோம் - ஸௌம்யா, அதிதிக்கும் சேர்த்துத்தான்.



பின்னர் சாப்பாடு - Catering சொல்லியிருந்தார்கள். 35 - 40 பேர் சாப்பிட்டோம். ஜெயராமன் - கல்யாணி புறப்பட்டனர். 2-30க்கு தொட்டில் போட்டனர்.


விஜயாவும், கிருத்திகாவும் குழந்தைக்கு தங்கக்காப்பு, வெள்ளிக்காப்பு, முக்காப்பு, (கறுப்பு) வளையல் போட்டனர். பாட்டுக்கள் பாடி, பின்னர் ஹாரத்தி எடுத்தனர். இவ்வாறாக புண்யாஹ வசனம் சிறப்பாக நடந்தேறியது.

சரோஜா - அத்திம்பேர், கிருத்திகா, அதிதி, மாமா, மாமி வீடு திரும்பினர். 4 மணி சுமாருக்கு நாங்களும் வீடு திரும்பினோம், அருண் காரில். எல்லாருக்கும் போன் செய்து விஷயம் தெரிவித்தோம்.












இன்னும் போட்டோக்கள் இங்கே.

ராஜப்பா
19-04-2008 12:30 மணி