Showing posts with label Punyahavachanam. Show all posts
Showing posts with label Punyahavachanam. Show all posts

Wednesday, June 13, 2012

அர்விந்த்-கிருத்திகா குழந்தை புண்ணியாஹவசனம்.

அர்விந்தின் குழந்தை ஜூன் 2-ஆம் தேதி பிறந்தான். காலை 9-42க்கு. ஸ்வாதி நக்ஷத்திரம்.
குழந்தையின் புண்யாகவசனம் ஜூன் 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. 2-ம் மாடியில் கிருத்திகாவின் பெற்றோர் வீட்டில் நடந்தது. முதலில் உறவினர் பலரையும் அழைத்திருந்தேன். ஆனால். சில காரணங்களால் யாரையுமே அழைக்க வேண்டாம் என நிச்சயித்து, எல்லாருக்கும் ஃபோன் மூலம் தெரிவித்து விட்டோம். அருண் குடும்பம், அஷோக் குடும்பம், அர்விந்த், நாங்கள், மாமா, மாமி மட்டுமே.

அஷோக்-நீரஜா 11-ஆம் தேதி இரவு 10 மணிக்கு பெங்களூரிலிருந்து வந்தனர். அருண் குடும்பம் 12-ஆம் தேதி காலை 7-15க்கே வந்தனர். [ ஸௌம்யா முதல்நாள் இரவே இங்கு தூங்கினாள்]

குழந்தைக்கு மங்கள ஸ்நானம் ஆயிற்று. எல்லாரும் தயாராகி 8-30க்கு மாடிக்கு சென்றோம். குழந்தைக்கு நிறைய ட்ரெஸ் அர்விந்த், அஷோக், அருண், நாங்கள் வாங்கினோம். செயின், மோதிரம், பொன்காப்பு, முக்காப்பு, வெள்ளி காப்பு, அரைஞாண் கயிற்றுக்கான காசுகள் ஆகியவைகளை தாத்தா-பாட்டி சீராக நாங்கள் ஞாயிறு ஜூன் 10 ஆம் தேதி வாங்கினோம். மயிலாப்பூர் NAC JEWELLERS ( North Mada Street) -ல் வாங்கினோம்.



சாஸ்திரிகள் 4 பேர் வந்தனர். காலை 8-45க்கு ஆரம்பித்து, 10-45க்கு முடிவுற்றது. தொட்டில் போட்டோம். பின்னர் 12-15 பேர் சாப்பிட்டோம்; வீடு திரும்பினோம் [First floor]





குழந்தைக்கு அர்ஜுன் என்று பெயரிட்டுள்ளோம். சுப்ரமணியம் என்பது ஸர்மா-நாமா.

உள்ளூர் வெளியூர் உறவினர் யாவருக்கும் ஃபோன் மூலம் செய்தி சொன்னோம்.

குழந்தை நன்றாக இருக்கிறான்; எல்லாம் அவன் அருள்.

ராஜப்பா
6:40 மாலை
13-6-2012
அஷோக் நீரஜா பகல் 4 மணிக்கு பெங்களூர் புறப்பட்டனர். அவர்களது 3-30 மணி ரயில் டிக்கெட்டுகள் கன்ஃபெர்ம் ஆகவில்லை. எனவே VOLVO AC பஸ்ஸில் போனார்கள். அருண் குடும்பத்தினர் இரவு 10-15க்கு படூர் புறப்பட்டனர்.











Saturday, April 19, 2008

பேரன் புண்யாஹ வசனம் SRIRAM PUNYAHA VACHANAM

எங்கள பேரனின் புண்யாஹ வசனம் ஏப்ரல் 17 (2008) வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடந்தேறியது.

குழந்தைக்கு ஸ்ரீராம் (SRIRAM) என்று பெயர் வைத்துள்ளோம். அழகான பெயர்.

காலை 8 மணிக்கே நானும் விஜயாவும் அடையாறு சென்று விட்டோம். காப்பரிசி பண்ணி எடுத்துக் கொண்டு போனோம். அங்கு யாவரும் - ஸௌம்யா உள்பட - குளித்து தயாராக இருந்தனர். ஜெயராமன், கல்யாணி


முதலில் வந்தனர். பூர்ணிமாவை வீட்டிலேயே விஜய் துணையுடன் விட்டுவிட்டு வந்தனர் - இதுவே முதல் தடவை. பின்னர் சரோஜாவும் அத்திம்பேரும் வந்தனர். 9-15 க்கு வாத்தியார் வந்தார், புண்யாஹவசனத்தை ஆரம்பித்தார்.

9-30க்கு அதிதி, கிருத்திகா, மாமா, மாமி வந்தனர். (மங்களம், பத்மா வரவில்லை. சுகவனம், சுதா பூனா சென்றுவிட்டனர். அர்விந்த் பாங்காக் சென்றுள்ளான். அஷோக், நீரஜாவும் வரவில்லை). காயத்ரி அம்மா வழியில் அக்கா, அத்திம்பேரை தவிர வேறு யாரும் வரவில்லை. எல்லாரும் ராம நவமிக்காக் துறையூர் சென்று விட்டனர். அப்பா வழியில் வந்திருந்தனர். மொத்தம் 35 - 40 பேர் இருந்திருப்போம். கூட்டம் குறைவுதான் - ஸௌம்யாவின் புணயாஹவசனத்தின் போது (27 May 2006) 100 -120 பேர் என ஜேஜே என்றிருந்தது.


அதிதியும், சௌம்யாவும் புதுப் புது டிரெஸ் போட்டுக்கொண்டனர். தம்பிப் பாப்பாவை சுற்றி சுற்றி வந்தனர் - ஆனால், அவன் தூங்கிக் கொண்டே இருந்தான்.

குழந்தையும் அப்பாவும் (ARUN) ஒரே நட்சத்திரத்தில் (அஸ்வினி) பிறந்திருப்பதால் "ஏக நட்சத்திர ஹோமம்" செய்தார்கள். குழந்தைக்கு நாங்கள் ஒரு தங்க செயின் (8.4 கிராம் @ 1115.00) வாங்கினோம்.

அர்விந்த், அஷோக்கும் செலவில் பங்கு கொண்டனர். வெள்ளிக்காப்பு, தங்கக்காப்பு பழசுதான், ஸௌம்யாவிற்கு வாங்கியது. முக்காப்பு மட்டும் புதுசாக வாங்கினோம். டிரெஸ் நிறைய வாங்கினோம் - ஸௌம்யா, அதிதிக்கும் சேர்த்துத்தான்.



பின்னர் சாப்பாடு - Catering சொல்லியிருந்தார்கள். 35 - 40 பேர் சாப்பிட்டோம். ஜெயராமன் - கல்யாணி புறப்பட்டனர். 2-30க்கு தொட்டில் போட்டனர்.


விஜயாவும், கிருத்திகாவும் குழந்தைக்கு தங்கக்காப்பு, வெள்ளிக்காப்பு, முக்காப்பு, (கறுப்பு) வளையல் போட்டனர். பாட்டுக்கள் பாடி, பின்னர் ஹாரத்தி எடுத்தனர். இவ்வாறாக புண்யாஹ வசனம் சிறப்பாக நடந்தேறியது.

சரோஜா - அத்திம்பேர், கிருத்திகா, அதிதி, மாமா, மாமி வீடு திரும்பினர். 4 மணி சுமாருக்கு நாங்களும் வீடு திரும்பினோம், அருண் காரில். எல்லாருக்கும் போன் செய்து விஷயம் தெரிவித்தோம்.












இன்னும் போட்டோக்கள் இங்கே.

ராஜப்பா
19-04-2008 12:30 மணி