Showing posts with label grandson. Show all posts
Showing posts with label grandson. Show all posts

Saturday, May 25, 2013

அர்ஜுன் ஆயுஷ்ஹோமம்

அர்ஜுன் ஆயுஷ்ஹோமம்.

அர்விந்த் - கிருத்திகாவின் குழந்தை சி. அர்ஜுனின் ஆயுஷ்ஹோமம் 2013 மே மாஸம் 23 வியாழன்று சென்னை RK Mutt road@-ல் ஸ்வாமி ஹாலில் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை ஒரு மாஸம் முன்னதாகவே அர்விந்தும் கிருத்திகாவும் ஆரம்பித்து விட்டனர். சாஸ்திரிகளுக்கு சொல்வது, caterer-உடன் பேசுவது என நானும் என் பங்கிற்கு வேலைகள் செய்தேன். பத்திரிகை LB road Mekala Invitationsல் அடிக்கப்பட்டது. எல்லாரையும் பத்திரிகை மூலமாகவும் ஃபோன் மூலமாகவும் அழைத்தோம் 

அருணும் அஷோக்கும் பெங்களூரிலிருந்து வந்தனர். 22-ஆம் தேதி விடியற்காலம் அருண் குடும்பத்தினரும், அன்று இரவு அஷோக் - நீரஜாவும் வந்தனர். நாங்களும் 14-ஆம் தேதியன்றே பெங்களூரிலிருந்து திரும்பி விட்டோம்.

மே 23, 2013 வியாழன்

காலை 03 மணிக்கே எழுந்து கொண்டேன். எல்லாரும் சீக்கிரமே எழுந்து கொண்டு, குளித்து ரெடியானோம்.5-45க்கு 2 காரில் ஹாலுக்கு கிளம்பினோம். அது ஏஸி ஹால். 

உறவினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். லலிதா-குமார், ஜனனி முதலில் வந்தனர். 6-45க்கு காலை சிற்றுண்டி - ரவா கேஸரி, இட்லி, பொங்கல், வடை. மும்பையிலிருந்து வைஷாலியும் விஷ்ணும் வந்தனர். சாஸ்திரிகள் மாமா 8 மணிக்கு வந்து ஆரம்பித்தார். அர்ஜுன் நீல கலரில் (ரெடிமேட்) வேஷ்டி போட்டுக் கொண்டான்.

சரோஜா, அத்திம்பேர், சுகவனம், பிரகாஷ், ராஜேஸ்வரி, சுபா, மகேஷ், விஜயராகவன், மாமி (சுதா ஆகியோர் ஊட்டியில் இருந்தார்கள், வரவில்லை), சுதன், இந்திரா, லக்ஷ்மி, பெண்கள், விஜயாவின் தோழி நாகலக்ஷ்மி ஆகியோர் வந்தனர். அர்விந்தின் ஆஃபீஸ்காரர்கள், மாமாவின் நண்பர்கள், மாமியின் உறவினர்கள்  என 90 பேருக்கும் மேலாக வந்தனர்.









TSG தாத்தாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு அர்ஜுன் காது குத்திக் கொண்டான். விழா சுமார் 11 மணிக்கு நிறைவு பெற்றது. பின்னர் விருந்து. அம்பத்தூர் அருகில் உள்ள அயப்பாக்கத்திலிருந்து, ராமா கேடரர். நாங்கள் யாவரும் 12-15க்கு சாப்பிட்டோம்; பின்னர் வீடு திரும்பினோம். 

சுந்தரேசன், சாவித்திரி, மங்களம், ரமா, வாசு, பாமா ஃபோன் மூலம் ஆசிகள் கூறினார்கள். இப்படியாக, அர்ஜுன் ஆயுஷ்ஹோமம் மிக சிறப்பாக நடந்தேறியது.

இரவு உணவு ஹோட்டலிலிருந்து வரவழைக்கப்பட்டது (அர்விந்த்) . சாப்பிட்ட பின்னர் 10:30க்கு அருண், அஷோக் ஆகியோர் பெங்களூர் கிளம்பினர்.

ராஜப்பா
25-05-2013

Wednesday, June 13, 2012

அர்விந்த்-கிருத்திகா குழந்தை புண்ணியாஹவசனம்.

அர்விந்தின் குழந்தை ஜூன் 2-ஆம் தேதி பிறந்தான். காலை 9-42க்கு. ஸ்வாதி நக்ஷத்திரம்.
குழந்தையின் புண்யாகவசனம் ஜூன் 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. 2-ம் மாடியில் கிருத்திகாவின் பெற்றோர் வீட்டில் நடந்தது. முதலில் உறவினர் பலரையும் அழைத்திருந்தேன். ஆனால். சில காரணங்களால் யாரையுமே அழைக்க வேண்டாம் என நிச்சயித்து, எல்லாருக்கும் ஃபோன் மூலம் தெரிவித்து விட்டோம். அருண் குடும்பம், அஷோக் குடும்பம், அர்விந்த், நாங்கள், மாமா, மாமி மட்டுமே.

அஷோக்-நீரஜா 11-ஆம் தேதி இரவு 10 மணிக்கு பெங்களூரிலிருந்து வந்தனர். அருண் குடும்பம் 12-ஆம் தேதி காலை 7-15க்கே வந்தனர். [ ஸௌம்யா முதல்நாள் இரவே இங்கு தூங்கினாள்]

குழந்தைக்கு மங்கள ஸ்நானம் ஆயிற்று. எல்லாரும் தயாராகி 8-30க்கு மாடிக்கு சென்றோம். குழந்தைக்கு நிறைய ட்ரெஸ் அர்விந்த், அஷோக், அருண், நாங்கள் வாங்கினோம். செயின், மோதிரம், பொன்காப்பு, முக்காப்பு, வெள்ளி காப்பு, அரைஞாண் கயிற்றுக்கான காசுகள் ஆகியவைகளை தாத்தா-பாட்டி சீராக நாங்கள் ஞாயிறு ஜூன் 10 ஆம் தேதி வாங்கினோம். மயிலாப்பூர் NAC JEWELLERS ( North Mada Street) -ல் வாங்கினோம்.



சாஸ்திரிகள் 4 பேர் வந்தனர். காலை 8-45க்கு ஆரம்பித்து, 10-45க்கு முடிவுற்றது. தொட்டில் போட்டோம். பின்னர் 12-15 பேர் சாப்பிட்டோம்; வீடு திரும்பினோம் [First floor]





குழந்தைக்கு அர்ஜுன் என்று பெயரிட்டுள்ளோம். சுப்ரமணியம் என்பது ஸர்மா-நாமா.

உள்ளூர் வெளியூர் உறவினர் யாவருக்கும் ஃபோன் மூலம் செய்தி சொன்னோம்.

குழந்தை நன்றாக இருக்கிறான்; எல்லாம் அவன் அருள்.

ராஜப்பா
6:40 மாலை
13-6-2012
அஷோக் நீரஜா பகல் 4 மணிக்கு பெங்களூர் புறப்பட்டனர். அவர்களது 3-30 மணி ரயில் டிக்கெட்டுகள் கன்ஃபெர்ம் ஆகவில்லை. எனவே VOLVO AC பஸ்ஸில் போனார்கள். அருண் குடும்பத்தினர் இரவு 10-15க்கு படூர் புறப்பட்டனர்.











Monday, April 07, 2008

பேரன் பிறந்தான், எனக்கு பேரன் பிறந்தான் ..

Gayathri, Arun, Sowmya, Aditi, Grandson -- Keywords
பேரன் பிறந்தான். 7 ஏப்ரல் 2008 காலை 5-34க்கு.

அருண் - காயத்ரிக்கு செல்வ மகனும் எனக்கும், விஜயாவிற்கும் செல்லப் பேரனும் இன்று விடியற்காலை 5-34 க்குப் பிறந்தான்.

காயத்ரிக்கு நேற்று விடியற்காலமே பிரஸவ வலி எடுக்க ஆரம்பித்தது. அவளை காலை 6 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை ஹைரோட்டில் உள்ள "சீதாபதி ஹாஸ்பிடலில்" அட்மிட் செய்து விட்டு, அருண் எங்களுக்கு தகவல் தெரிவித்தான்.

நேற்று காலை சுமார் 4 மணிக்கு எனக்கு ஒரு கனவு வந்தது - கனவில் அருண் போனில் என்னிடம் சொல்கிறான் : "அப்பா, காயத்ரியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விட்டேன்!". இந்த என்னுடைய விடியல் கனவை, 6-30 மணிக்கு நான் விஜயாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே - நம்பினால் நம்புங்கள் - அதே விநாடி போன் அடிக்கிறது. போனில் நிஜமாகவே அருண், நிஜமாகவே காயத்ரி அட்மிட் ஆகியிருக்கிறாள் - இதை என்னவென்று சொல்வீர்கள். சாவித்திரியிடம் இதைக் குறிப்பிட்டபோது, "இதுதான் ரத்தம்" எனப் பரவசப்பட்டாள்.

ஹாஸ்பிடலுக்கு சென்றோம். ஆனால் காயத்ரிக்கு வலி வரவேயில்லை. இரவு 8 மணிவரை இருந்துவிட்டு வீடு திரும்பினோம்.காயத்ரியின் அம்மா துணைக்கு ஹாஸ்பிடலில் இருந்தார். ஸௌம்யாவிற்கு தன் அம்மா ஹாஸ்பிடலில் இருப்பதே தெரியாது. அடையாறில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவள் எழுந்ததும், அவளை இங்கே எங்கள் வீட்டிற்கு கூட்டி வந்து, காலை 10 மணிக்குத்தான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் சென்றோம். அம்மாவைப் பார்த்ததும் ஸௌம்யா கேட்ட முதல் கேள்வி - "அம்மா, உனக்கு என்ன ஆச்சு?" - ஆச்சரியத்தில் திளைத்து விட்டேன். ரொம்பவும் சமத்தாக இருக்கிறாள். God Bless her.

இன்று, 7 ஏப்ரல் 2008.
காலை 4 மணிக்கு போன் அடிக்கிறது; காயத்ரியின் அம்மா. காயத்ரிக்கு சிசேரியன் பண்ண ரெடி செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்று தகவல் கொடுக்கிறார். அரக்கப் பரக்க கிளம்பினோம் - அருண், நான், விஜயா, ம்ற்றும் அஷோக். 4-35க்கு ஹாஸ்பிடலில் இருந்தோம். ஆபரேஷன் தியேட்டர் வாசலில் 5 மணி முதல் காத்திருந்தோம் - ஒவ்வொருவர் மனசிலும் ஆயிரம் எண்ணவோட்டம். விஜயா மற்றும் மாமியின் இடைவிடாத ஸ்லோகங்கள்.

5-40க்கு டாக்டர் வெளியில் வந்தார், இனிப்பு செய்தியை சொன்னார் - ஆண் குழந்தை 5-34க்குப் பிறந்தது, எடை 2.9 கிலோ. ஆண்டவனே, உனக்குப் பல கோடி பல்லாயிரம் கோடி நமஸ்காரங்கள். விழியோரத்தில் முகிழ்த்த அந்த கண்ணீர் முத்தை, யாருமே துடைத்துக் கொள்ளவில்லை.

6 மணிக்கு முன்பாகவே குழந்தையை அறைக்குக் கொண்டு வந்து விட்டனர். அந்த பட்டு மேனி இனியனை, பஞ்சுப் பொதியலை, அழகுப் பெட்டகத்தை, செல்வக் களஞ்சியத்தை மாறி மாறி தூக்கிக்கொண்டு மடியில் இருத்திக் கொண்டோம். குழந்தையும் கண் விழித்தபடியே எல்லாரையும் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

7-30 மணி சுமாருக்கு காயத்ரியையும் அறைக்கு கொண்டு வந்தனர். அயர்ச்சியையும் மீறி அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி, ஆனந்தம். 8-30 மணிக்கு "புத்தம்புது அக்காக்கள்" ரெண்டு பேரும் வந்தனர் - "தம்பிப் பாப்பா எங்கே, தம்பிப் பாப்பா எங்கே?"

தம்பிப் பாப்பாவை பார்த்து ரெண்டு பேருக்கும் ஒரே மகிழ்ச்சி. இப்போதும் ஸௌம்யா தன் அம்மாவை பார்த்து, "எப்பிடி இருக்கே, சௌக்கியமா" என்றுதான் கேட்டாளே தவிர ஒரு சிணுங்கலோ, அழுகையோ கிடையாது. 10 மணிக்கு வீட்டிற்குக் கிளம்பும்போதுதான் ரெண்டு அக்காக்களும் ஒரே "அழுகை" - தம்பிப் பாப்பாவை இப்போதே ஆத்துக்கு கூட்டிண்டு போயிடலாம்!

எல்லாருக்கும் போன் மூலம் செய்தி சொன்னோம்.

காயத்ரியும் குழந்தையும் நலமாக இருக்கின்றனர். குழந்தை அஸ்வினி நட்சத்திரம்.

வாழ்த்துக்கள், ஆசிகள் சொன்ன எல்லாருக்கும் காயத்ரி - அருண் - அஷோக் - நீரஜா - அர்விந்த் - கிருத்திகா - விஜயா சார்பிலும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றாமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம், ஆண்டவனே உனக்கு நமஸ்காரங்கள்.

ராஜப்பா
7-30PM 07-04-2008