Showing posts with label puliyotharai. Show all posts
Showing posts with label puliyotharai. Show all posts

Tuesday, October 14, 2008

அதிதியின் மழலைகள்

அதிதியின் மழலைகள்

இதெல்லாம் 2008 செப்டம்பர் இறுதி, அக்டோபர் முதலில் நடந்தவை.

# 1. இரவு 10-15க்கு, விரித்திருந்த பாயில் சப்பணம் இட்டு அழகாக உட்கார்ந்த அதிதி, பாட்டியையும் தன் பக்கத்தில் உட்காரச் சொல்லி பாட்டு பாட ஆரம்பித்தாள். பின்னர், அர்விந்தையும், கிருத்திகாவையும் கூப்பிட்டு "ஒக்காந்துக்கோ அப்பா, ஒக்காரு அம்மா" என்று கட்டாயமாக உட்கார வைத்தாள். பிறகென்ன, அடுத்த 30 நிமிஷத்திற்கு இன்னிசை மழைதான், அழகிய மழலையில் !!

# 2. அடுத்த நாள் இரவு எங்கள் அறைக்கு வந்து, "நான் தான் தாத்தாவுக்கு காலில் எண்ணெய் தடவி விடுவேன்; பாட்டி நீ ஒக்காந்துக்கோ !" என்று பாட்டிக்கு அன்புக் கட்டளை போட்டுவிட்டு, தன் பிஞ்சுக் கையால் எனக்கு எண்ணெய் தடவி நீவி விட்டாள். இது போன்ற சேவைகளுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

# 3. இது இன்னொரு நாள் மாலை. என்னையும், விஜயாவையும் உட்கார வைத்து, பாத்திரத்திலிருந்த புளியோதரையை கரண்டியில் எடுத்து, தன்னுடைய இடது கையால் என்னுடைய (ம்ற்றும் விஜயாவினுடைய) வலது கையை தாங்கிக்கொண்டு, என் கையில் ஒரு தாயின் அல்லது பாட்டியின் பரிவு, பாசத்தோடு புளியோதரையை கொடுத்தாள். So much kindness, so much compassion in her eyes !! நாங்கள் சாப்பிட சாப்பிட, "இன்னும் கொஞ்சம் சாப்பிடு தாத்தா," "இன்னும் கொஞ்சம் பாட்டி" என்று போட்டுக்கொண்டேயிருந்தாள். அன்று, என் வயிறு மட்டுமா நிரம்பியது என்று நினைக்கிறீர்கள் , மனஸே நிரம்பியது.

# 4. இன்னொரு மாலையில், விஜயாவின் முழங்கையில் ஒரு சின்ன காயத்தை அதிதி பார்த்து விட்டாள். அவ்வளவுதான் - "பாட்டி ! வ்ந்து என் பக்கத்திலே ஒக்காந்துக்கோ; க்ரீம் தடவி விடறேன்" "நானே ஒனக்கு மம்மம் போடறேன்"னு சொல்லி, பாட்டி கையிலே ரெண்டு கரண்டி தயிர் சாதம் போட்ட பிறகே, குழந்தை சமாதானம் ஆனாள்.

GOD Bless Aditi, our Darling

Rajappa
10:30am 14 Oct 2008

Saturday, May 31, 2008

அதிதி தந்த புளியோதரை Aditi

முன்பே எழுதியிருக்கிறேன் (படிக்கவும்) - அதிதியும் ஸௌம்யாவும் நெறய்ய பேசுகிறார்கள் என்று. அதிதியின் மழலை மணிக்கு மணி கூடிக்கொண்டே போகிறது.

தானாகவே கற்பனை பண்ணிக் கொண்டு தனக்குத் தானே விளையாடிக் கொள்வதில் அதிதி திறமைசாலி.

நேற்று இரவு (30-5-2008) அவள் "தாத்தா, ஒனக்கு மம்மம் வேணுமா? " என்று என்னைக் கேட்டாள். "ஆமாம் " என்றேன். என்ன செய்கிறாள் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். தானாகவே டிரெஸ் போட்டுக்கொண்டாள் (பாவனைதான்); பின்னர், உம்மாச்சியை கைகூப்பி வேண்டினாள். (கோயிலில் இருக்கிறாளாம்!); உம்மாச்சி விபூதி இட்டுக் கொண்டாள் (வாயில் போட்டுக் கொள்ள மறக்கவில்லை); கஜானனம் பூத கணாதி ... ஸ்லோகம் சொன்னாள்; விழுந்து நமஸ்காரம் பண்ணினாள்.

கோயில், மம்மம் - இரண்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்? இருங்கள், இதோ அதிதி எங்கே போகிறாள்? கட்டில் படுக்கை மீது 4 அடி எடுத்து வைத்த அவள், தன் சட்டை பாக்கெட்டிலிருந்து "அம்பது ரூபாய் காசு " எடுத்தாள் (பாவனைதான்). கையை நீட்டி, "மம்மம் தாங்கோ " என்றாள்.

கையில் வாங்கிக் கொண்டு, அதை என்னிடம் "தாத்தா, மம்மம் இதோ" என்று கொடுத்தாள். என்ன, புரிகிறதா? நேற்று சாயங்காலம் அவள் தன் அம்மாவுடன் மயிலாப்பூர் ஸ்ரீகற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு போயிருக்கிறாள்.

ஸ்வாமி தரிசனத்திற்குப் பிறகு பிரசாதம் விற்பனை இடத்திற்கு போய், பணம் கொடுத்து புளியோதரை வாங்கி வந்தார்கள். (கொசுறுச் செய்தி: இந்தக் கோயில் புளியோதரை மிக ருசியாக இருக்கும்) எல்லாவற்றையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அதிதி இதையே எனக்குப் பண்ணிக் காட்டி "மம்மம்" கொடுத்தாள்.

நிஜ புளியோதரையை விட, குழந்தையின் இந்த மம்மம் புளியோதரை பல மடங்கு ருசியாக இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை.

God Bless Aditi. God Bless Sowmya, SRIRAM

ராஜப்பா
12.45 31-5-2008