Saturday, February 28, 2009

பெங்களூரில் ஸௌம்யா Sowmya




நேற்று (27-02-2009) காலை 5 மணி சுமாருக்கு, எங்கள் பேத்தி ஸௌம்யா பெங்களூர் வந்தாள், தன் (அம்மா வழி தாத்தா-பாட்டியுடன்). 15 தினங்கள் இங்கு அவள் இருப்பாள்.

தன் அம்மா, அப்பாவை விட்டு அவள் தனியாக இருப்பது இதுவே முதல் முறை. இரண்டே முக்கால் வயசு குழந்தை, ஏங்கிப் போய்விடுவாளோ என நான் பயப்படுகிறேன். சமத்துக் குழந்தை.


rajappa
11:45 am on 28 Feb 2009






இதன் தொடர்ச்சி - மார்ச் 12-ஆம் தேதி.

ஸௌம்யா இன்று காலை 7-30 மணி அளவில் சென்னை திரும்பினாள். அருண், காயத்ரி, ஸ்ரீராம் ஸ்டேஷன் சென்று அவளை அழைத்து சென்றனர். ஸௌம்யா 13 நாட்கள் பெங்களூரில் இருந்தாள் - தன் அப்பா, அம்மாவை விட்டு விட்டு தனியாக!

நான் பயந்து கொண்டே இருந்தேன் - எங்கேயாவது குழந்தைக்கு அப்பா-அம்மா ஞாபகம் வந்து அழப்போகிறாளே என்று; ஆனால் ஸௌம்யா சமாளித்து விட்டாள். அப்பா அருண் போனில் பேசினால், அவள் கண் கலங்கிவிடும்; சென்னைக்குத் திரும்புவதற்கு முதல்நாள், காயத்ரி ஏதோ சொல்ல, அதை தவறாக புரிந்துகொண்டு, ஸௌம்யா விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள். ஆனால், 5 நிமிஷங்களுக்குள் அவளை சமாதானப்படுத்தி விட்டேன்.

13 நாட்களும் சமத்தாக இருந்தாள்; வாய் ஓயாத பேச்சு - ஆயிரக்கணக்கில் கேள்விகள். அஷோக் வீட்டில் 3 நாட்கள் மட்டுமே இருந்தாள் - எங்கள் யாவருக்கும் அது ஒரு இனிய அனுபவம் -
முக்கியமாக, விஜயாவிற்கு. “பாட்டி, பாட்டி” என்று பாட்டி பின்னாலேயே சுற்றிக் கொண்டு இருந்தாள்.


God Bless Sowmya, Aditi, Sriram.

Rajappa
10:45am on 12 March 2009

No comments:

Post a Comment