Wednesday, January 13, 2010

Aditi's Mazhalai Muthu

போன வாரம் (11 ஜனவரி = மார்கழி 27) திருப்பாவையின் “கூடாரை வெல்லும்” என ஆரம்பிக்கும் 27வது பாசுரம். இதைப் பற்றி குழந்தை அதிதியிடம் (3 1/2 வயசு) சொல்லிக் கொண்டிருந்தேன்.

“மூடநெய் பெய்து முழங்கை வழிவார” என ஊற்றிய நெய் முழங்கை வரை வழியும் எனச் சொன்னேன். கேட்டுக் கொண்டிருந்தாள். அடுத்த நாள் அவள் தக்காளிப் பழத்தை முழுசாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். திடீரென “தாத்தா! நெய் மாதிரியே தக்காளி ஜூஸும் முழங்கை வரை வழிகிறது !!” என்றாளே பார்க்கணும் …

ராஜப்பா
13-01-2010
1000 மணி

No comments:

Post a Comment