Tuesday, March 19, 2013

அர்ஜுன் முடி இறக்குதல் - வைத்தீஸ்வரன் கோயில் - 18-03-2013

குழந்தை அர்ஜுனுக்கு முடி இறக்குவதற்கு இரண்டு மாசங்களுக்கு முன்னதாக நாள் குறித்த போதிலும், அதை மூன்று முறை மாற்ற வேண்டியதாயிற்று. கடைசியில் மார்ச் 17-ஆம் தேதி கிளம்புவதாயும், 18-ஆம் தேதி (திங்கள்) முடி இறக்குவதாயும் நிச்சயித்தோம்.

ஏற்பாடுகள் பண்ணினோம். லாட்ஜுக்கு 18 ஃபிப் ஃபோன் பண்ணி 5 ரூம் கேட்டுக்கொண்டேன். துரை குருக்களுக்கும் ஃபோன் பண்ணி சொன்னேன். 9 மார்ச் TEMPO TRAVELLER (AC) க்கு சொன்னேன்; Balaji cabs, Besant nagar.

அஷோக், நீரஜா பெங்களூரிலிருந்து 16-03 அன்று காலை வந்தனர். காயத்ரி படூரிலிருந்து ஸௌம்யா, ஸ்ரீராம் இவர்களை கூட்டிக் கொண்டு 16-03 காலை 10.00 மணிக்கும், அன்றிரவு அருண் பெங்களூரிலிருந்தும் வந்தனர்.

17-03-2013 ஞாயிறு :  

காலை எல்லாரும் எழுந்து, குளித்து ரெடியானோம். சாப்பிட்டோம். TSG மாமா மாமியும் இங்கேயே சாப்பிட்டனர். 11.00 மணிக்கு van-ல் கிளம்பினோம். ECR-ல் பயணித்தோம். புதுச்சேரி ஸ்ரீ சத்குரு ஹோட்டலில் பகல் 2-45க்கு தோசை சாப்பிட நிறுத்தினோம். பின்னர் கிளம்பி நேராக சிதம்பரம் கோயிலில் மாலை 5-15க்கு நிறுத்தி ஸ்வாமி தரிஸனம் பண்ணிக் கொண்டோம். 

இரண்டு மணி நேரம் கழித்து, இரவிற்கு சாப்பிட சிதம்பரம் ஹோட்டலிலிருந்து இட்லி வாங்கி வந்து, வைத்தீஸ்வரன் கோயில், பாலாம்பிகா லாட்ஜை இரவு 9-30க்கு சென்று அடைந்தோம். 3 ஏஸி அறைகளும், 2 ஏஸி-இல்லாத அறைகளும் மொத்தம் 5 ரூம்கள் ஏற்பாடு செய்திருந்தேன். நாங்கள் இருவர், மாமா-மாமி இருவர் என இரண்டு ஏஸி-இல்லாத அறைகளில் தங்கினோம். அருண், அஷோக், அர்விந்த் ஆகியோர் ஏஸி அறைகளில் தங்கினர். இட்லி சாப்பிட்டு விட்டு தூங்கினோம்.

18-03-2013, திங்கள் : வைத்தீஸ்வரன் கோயில்.

காலை சீக்கிரமே எழுந்து, காஃபி குடித்து, முடி இறக்கும் இடத்திற்கு சென்றோம். 7 மணி சுமாருக்கு அர்ஜுனுக்கு முடி இறக்கினோம். அஷோக் மடியில் உட்கார்ந்து கொண்டான். கொஞ்சம் அழுதான். 100.00

லாட்ஜுக்கு வந்து எல்லாரும் குளித்தோம். பிறகு டிஃபன். (மாவு விளக்கு போடும் விஜயா, காயத்ரி, நீரஜா ஆகியோர் சாப்பிடவில்லை) கோயிலுக்கு சென்று அம்மன் சன்னதியில் மாவு விளக்கு போட்டோம்.

அடுத்து, ஸ்ரீ துரை குருக்களை கண்டுபிடித்து, விநாயகர், ஸ்வாமி, அம்மன், முத்துக் குமாரஸ்வாமி, அங்காரகன் ஆகிய ஐவருக்கும் அர்ச்சனை பண்ணினோம் 500.00. மணி 11 ஆகியிருந்தது. இன்று முஹூர்த்த நாள் ஆனதால் கோயிலில் நிறையக் கல்யாணங்கள்; ஒரே கூட்டம்.

லாட்ஜுக்குத் திரும்பி வந்து, பக்கத்தில் உள்ள மெஸ்ஸில் சாப்பிட்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது (50.00 மட்டுமே).  ரூம்களுக்கான பணம் செலுத்தி விட்டு, 12:30க்கு வைத்தீஸ்வரன் கோயிலை விட்டு கிளம்பினோம். எல்லாம் நன்றாக திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது.

2:30க்கு புதுச்சேரி சத்குரு ஹோட்டலில் இறங்கி காஃபி குடித்தனர். பின்னர் கிளம்பி ECR லிருந்து OMR க்கு மாறி படூர் சென்றோம். அங்கு அருண், காயத்ரி, குழந்தைகள் சௌம்யா, ஸ்ரீராம் ஆகியோரை இறக்கி விட்டு, மாலை 7-30க்கு திருவான்மியூர் வீடு திரும்பினோம். இரவு சாப்பாடு HOTCHIPS லிருந்து  அர்விந்த் வாங்கி வந்தான். அஷோக் நீரஜா சாப்பிட்டு விட்டு, அருண் வருவதற்காக காத்திருந்தனர். படூரிலிருந்து அருண் வந்ததும், மூன்று பேரும் 10 மணி சுமாருக்கு டாக்ஸியில் ஸ்டேஷன் / பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர்.

இவ்வாறாக எங்கள் வைத்தீஸ்வரன் கோயில் பயணம் இனிதே முடிவுற்றது. எல்லாம் ஆண்டவன் அருள், ஆசிகள்.

ராஜப்பா
19-03-2013





No comments:

Post a Comment