Wednesday, June 13, 2012

அர்விந்த்-கிருத்திகா குழந்தை புண்ணியாஹவசனம்.

அர்விந்தின் குழந்தை ஜூன் 2-ஆம் தேதி பிறந்தான். காலை 9-42க்கு. ஸ்வாதி நக்ஷத்திரம்.
குழந்தையின் புண்யாகவசனம் ஜூன் 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. 2-ம் மாடியில் கிருத்திகாவின் பெற்றோர் வீட்டில் நடந்தது. முதலில் உறவினர் பலரையும் அழைத்திருந்தேன். ஆனால். சில காரணங்களால் யாரையுமே அழைக்க வேண்டாம் என நிச்சயித்து, எல்லாருக்கும் ஃபோன் மூலம் தெரிவித்து விட்டோம். அருண் குடும்பம், அஷோக் குடும்பம், அர்விந்த், நாங்கள், மாமா, மாமி மட்டுமே.

அஷோக்-நீரஜா 11-ஆம் தேதி இரவு 10 மணிக்கு பெங்களூரிலிருந்து வந்தனர். அருண் குடும்பம் 12-ஆம் தேதி காலை 7-15க்கே வந்தனர். [ ஸௌம்யா முதல்நாள் இரவே இங்கு தூங்கினாள்]

குழந்தைக்கு மங்கள ஸ்நானம் ஆயிற்று. எல்லாரும் தயாராகி 8-30க்கு மாடிக்கு சென்றோம். குழந்தைக்கு நிறைய ட்ரெஸ் அர்விந்த், அஷோக், அருண், நாங்கள் வாங்கினோம். செயின், மோதிரம், பொன்காப்பு, முக்காப்பு, வெள்ளி காப்பு, அரைஞாண் கயிற்றுக்கான காசுகள் ஆகியவைகளை தாத்தா-பாட்டி சீராக நாங்கள் ஞாயிறு ஜூன் 10 ஆம் தேதி வாங்கினோம். மயிலாப்பூர் NAC JEWELLERS ( North Mada Street) -ல் வாங்கினோம்.



சாஸ்திரிகள் 4 பேர் வந்தனர். காலை 8-45க்கு ஆரம்பித்து, 10-45க்கு முடிவுற்றது. தொட்டில் போட்டோம். பின்னர் 12-15 பேர் சாப்பிட்டோம்; வீடு திரும்பினோம் [First floor]





குழந்தைக்கு அர்ஜுன் என்று பெயரிட்டுள்ளோம். சுப்ரமணியம் என்பது ஸர்மா-நாமா.

உள்ளூர் வெளியூர் உறவினர் யாவருக்கும் ஃபோன் மூலம் செய்தி சொன்னோம்.

குழந்தை நன்றாக இருக்கிறான்; எல்லாம் அவன் அருள்.

ராஜப்பா
6:40 மாலை
13-6-2012
அஷோக் நீரஜா பகல் 4 மணிக்கு பெங்களூர் புறப்பட்டனர். அவர்களது 3-30 மணி ரயில் டிக்கெட்டுகள் கன்ஃபெர்ம் ஆகவில்லை. எனவே VOLVO AC பஸ்ஸில் போனார்கள். அருண் குடும்பத்தினர் இரவு 10-15க்கு படூர் புறப்பட்டனர்.











No comments:

Post a Comment