Monday, November 17, 2008

அதிதியும் ஸௌம்யாவும் Aditi and Sowmya

அதிதியும் ஸௌம்யாவும்

நேற்று (16 நவம்பர்) மாலை 6 மணியிருக்கும். என்னுடைய மொபைல் போன் அழைத்தது. போனை காதில் வைத்தால், அந்த முனையில் ஸௌம்யா - "பாட்டி, நான் ஸ்லோகம் சொல்றேன்" னு,

Mudakaraatha Modakam

Sada Vimukti Saadhakam

Kalaadharaavatamsakam

Vilasiloka Rakshakam

Anaaya Kaika Naayakam

Vinasitebha Daityakam

Nataasubhasu Naashakam

Namaami Tham Vinaayakam. என்று ஆரம்பிக்கும் ஸ்ரீசங்கராச்சாரியாரின் மஹா கணேஷ பஞ்சரத்னம் ஸ்லோகத்தின் முதல் இரண்டு ஸ்லோகத்தை தடதடவென சொல்லுகிறாள் !!

மகிழ்ச்சியிலும், வியப்பிலும் எங்கள் இருவருக்கும் பேச்சே வரவில்லை. ஸௌம்யாவிற்கு இன்று (17 நவ) 2 வயசும் 6 மாசமும்தான் ஆகிறது. விநாயகர் அவளுக்கு பூரண அருள் புரியட்டும்.

இந்த அதிதி இருக்கிறாளே, அவ்ளுக்கு இன்று 2 வயசும் 5 மாசமும் ஆகிறது. குழந்தைக்கு, இந்த ஸ்லோகமும் இன்னும் 4-5 ஸ்லோகங்களும் தெரியும். சதா சர்வ காலமும் "ஓம் நமோ நாராயணாய" தான். " ஏனடி, தாத்தா பேரை சொல்றே" ன்னு வேடிக்கையா கேட்டா, " நீ என்ன, விஷ்ணு உம்மாச்சியா? நீ தாத்தா தானே !" என திட்டவட்டமாக அறிவித்து விடுவாள்.

ரெண்டு பேருமே ரொம்ப சமத்துக்குழந்தைகள். ஆண்டவன் ஆசி புரியட்டும்

ராஜப்பா தாத்தா
12:35 17-11-2008

No comments:

Post a Comment