Friday, December 05, 2008

அதிதி ஸ்லோகம் சொல்கிறாள் Aditi

அதிதி ஸ்லோகம் சொல்கிறாள் Aditi

நேற்று (04-12-2008) வியாழக்கிழமை காலை மணி 9 இருக்கும். குளித்துவிட்டு வந்த அதிதி 2 டவல்களை எடுத்து வந்து, ஒன்றை தன் பாட்டியிடம் (விஜயா) கொடுத்தாள்; இன்னொன்றை தான் வைத்துக்கொண்டாள். பாட்டியிடம் விபூதி இட்டுக்கொண்டாள்.

ஸ்வாமிக்கு எதிரில் அழகாக சப்பணமிட்டு கீழே உட்கார்ந்தாள்; துண்டை தன் கால்கள்மீது விரித்துக்கொண்டாள். (பாட்டுப் பாட கீழே உட்காரும்போது அதிதிக்கு தன் கால்கள் வெளியே தெரியக்கூடாது - இதில் அவள் மிக கவனமாக இருப்பாள்) பாட்டியையும் அவ்வாறே துண்டை விரித்துக்கொள்ள சொன்னாள்.
பின்னர் ஆளுக்கு ஒன்றாக இரண்டு ஸ்லோக புஸ்தகங்களை கொடுத்தாள். தனக்குத் தெரிந்த ஸ்லோகங்களை சொல்ல ஆரம்பித்தாள் - பாட்டியும் அதே ஸ்லோகத்தை திருப்பி சொல்ல வேண்டும். இரண்டு பேருமாக சேர்ந்து சுமார் 10-15 நிமிஷங்கள் நிறைய ஸ்லோகங்கள் சொல்லி முடித்த பிறகே எழுந்து கொண்டாள்.
ஆண்டவன் குழந்தையை ஆசீர்வதிப்பார்.

ராஜப்பா
5-12-2008 12:30 மணி

No comments:

Post a Comment