Tuesday, May 19, 2009

Sowmya Celebrates Her 3rd Birthday - 17-5-2009

ஸௌம்யாவின் மூன்றாவது பிறந்த நாள்

17-05-2009, ஞாயிற்றுக்கிழமை இதைக் கொண்டாடினோம். திருவான்மியூரில் அருண் வீட்டில் விழா நடந்தது. நானும் விஜயாவும் மாலை 5 மணிக்கே போய்விட்டோம்.

6-30 மணி முதல் மற்றவர்கள் வர ஆரம்பித்தனர். அதிதி ஒரு புதிய அழகிய “அனார்கலி” சூடிதாரில் வந்தாள். ஸௌம்யா நாங்கள் வாங்கிக் கொடுத்த பாவாடை-சட்டையை போட்டுக்கொண்டாள்; ஸ்ரீராமிற்கும் புது ட்ரெஸ்.

ஸௌம்யாவிற்கு “அனார்கலி” சூடிதார் அர்விந்த்-கிருத்திகா-அதிதி பரிசளித்தனர்; சதீஷ் அழகிய ஒரு BAG பரிசளித்தான். (அதிதிக்கும் ஒன்று)

7-15 மணிக்கு ஸௌம்யா கேக் வெட்டினாள்.

பின்னர் விருந்து ஆரம்பம். குலாப் ஜாமூன் மற்றும் கேக் - அம்பாஸடர் பல்லவா ஹோட்டலிலிருந்து. Phulka சப்பாத்தி, அதற்கான இரண்டு வகை கறி/கூட்டுகள், பனீர் பட்டர் மஸாலா; Noodles; - இவையும் வெளியிலிருந்து தருவிக்கப்பட்டவை. விஜயாவும், காயத்ரியும் வீட்டிலேயே ஜூஸ், தயிர் சாதம் பண்ணினார்கள். விருந்து நன்றாக இருந்தது. எல்லாவற்றையும், குறிப்பாக தயிர்சாதத்தை, ரசித்து சாப்பிட்டோம்.

அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம், நாங்கள் இருவர், அர்விந்த், கிருத்திகா, அதிதி, சதீஷ், காயத்ரியின் அப்பா-அம்மா, பெரியப்பா-பெரியம்மா, சுரேஷ், பானு, இரண்டு குழந்தைகள், பெரியப்பா பெண் சித்ரா, இரண்டு குழந்தைகள், கணேஷ், காயத்ரியின் அம்மா வழியிலிருந்து பெரியம்மா, பெரியப்பா, சுந்தர் அண்ணா, கோபால் மாமா, கிட்டா மாமா, சாரதா, ஸ்வாதி, விஜயராகவன், மாமி, சந்தர், ஜனனி - மொத்தம் 32 பேர்.

9 மணிக்கு ஒவ்வொருவராக வீடு திரும்பினர். காயத்ரி-அருணுக்கு உதவி செய்துவிட்டு நாங்கள் வீடு திரும்பும்போது இரவு மணி 10-45. அருண் காரில் கொண்டு வந்து விட்டான்.

ஸௌம்யாவின் 3-ம் பிறந்த நாள் விழா மிக இனிதாக சிறப்பாக நடந்தேறியது. குழந்தைகளுக்கும் அருண்-காயத்ரிக்கும் எங்கள் ஆசிகள்.

ராஜப்பா
19-05-2009
பகல் மணி 12:25

No comments:

Post a Comment