Thursday, July 29, 2010

குழந்தையின் உள்ளம்

என் நாலு வயசு பேத்தி அதிதிக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தேன் - மஹாபாரதத்தில் த்ரௌபதியை துகிலுரியும் கதை.

அதிதி தன் 4-வது பிறந்த நாளன்று...

த்ரௌபதியின் புடைவையை துச்சாதனன் துகிலுரிய ஆரம்பிக்கும்போது, அவள் “கிருஷ்ணா !” என்று ஓலமிட்டு அவனை உதவிக்கு அழைக்க, பகவானும் அவளுக்கு தொடர்ச்சியாக புடைவைகளை அளித்துக் கொண்டேயிருக்க, ஒரு கட்டத்தில் துச்சாதனன் கை சளைத்து கீழே விழுந்தான் - என கதையை முடித்தேன்.

“அப்புறம், அந்த எல்லா புடவையும் அவள் மடிச்சி எடுத்திண்டு போய், தன்னோட பீரோவில வச்சிண்டுட்டாளா? FUNCTIONS- க்கு கட்டிண்டு போலாமே?!” - இது குழந்தையின் கேள்வி.

ராஜப்பா
11:10 காலை
29-07-2010

1 comment:

  1. Amazing imagination by the kid... I loved her view...

    ReplyDelete