Monday, June 04, 2012

எங்கள் வீட்டில் புது வரவு ..

எங்கள் வீட்டில் ஒரு இனிய புது வரவு. 2012ம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி, சனிக்கிழமை, ஸ்வாதி நக்ஷத்திரத்தில் காலை 9-42 க்கு அர்விந்த் - கிருத்திகாவிற்கு ஒரு அழகான ஆண் மகவு பிறந்தது. 3.3 கிலோ.

முன்னதாக, ஜூன் 1-ஆம் தேதி கிருத்திகாவிற்கு வலி எடுக்க ஆரம்பித்தது. உடனே இரவு 9-15க்கு அவளை வேளச்சேரியில் ஏ.ஜி.எஸ் காலனியில் உள்ள KS Hospital-ல் சேர்த்தோம். நாங்கள் இருவர், கிருத்திகாவின் பெற்றோர், அதிதி, அர்விந்த் எல்லாரும் போனோம். அவளை அட்மிட் பண்ணி விட்டு நாங்கள் வீடு திரும்பினோம். அர்விந்த அவளுக்குத் துணையிருந்தான்.

மறுநாள் காலை 8 மணிக்கே அங்கு சென்றோம். 0942க்கு குழந்தை பிறந்தான். ஆண் குழந்தை. நார்மல் பிரசவம். குழந்தையை எல்லாரும் தூக்கிக் கொண்டனர்; ஒரே சந்தோஷம். அதிதிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.  நாங்கள் பக்கத்திலேயே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மாலை 4க்கு வீடு திரும்பினோம். ஜூன் 3-ஆம் தேதி பகல் 12 மணி சுமாருக்கு டிஸ்சார்ஜ் பண்ணினார்கள். குழந்தை வீடு வந்து சேர்ந்தான்.
குழந்தையும், கிருத்திகாவும் நலமாக இருக்கின்றனர்.

எல்லாம் ஸ்ரீராமனின் அருள். எல்லாரும் நன்றாக இருக்கட்டும்.

ராஜப்பா
மாலை 6-15 மணி
ஜூன் 4, 2012

குழந்தைக்கு அர்ஜுன் என பெயரிட எண்ணியுள்ளோம்.


No comments:

Post a Comment