Wednesday, October 24, 2007

தாத்தா - தாத்தா Aditi Sowmya

2007, ஜுன் மாசத்தில் எழுதினேன் - On Becoming a Thatha - என்று. அப்போது, பேத்திகள் ஸௌம்யா, அதிதி இருவரும், "தாத்தா எங்கே?" என்று கேட்டால், தங்கள் பிஞ்சு தளிர் விரல் நீட்டி என்னைக் காண்பிப்பார்கள் - என் மனசை அள்ளிக் கொண்டுப் போய்விடுவார்கள்.

சென்ற இரண்டு மாசங்களாக இருவருமே , அழகான தேன்மழலையில் "தாத்தா, தாத்தா" என ஓயாமல் என்னைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இன்பத்தேன் வந்து பாயுது என் காதினிலே. பிள்ளைக் கனியமுது, பேசும் பொற்சித்திரம் இரண்டு பேரும் சொல்லு மழலையிலே என் உள்ளம் குளிருது. (மஹாகவிக்கு என் நன்றிகள்).

தாத்தா ஆனவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். Aditi, Sowmya, Thatha

ராஜப்பா தாத்தா

அக்டோபர் 24, 2007

மாலை 7 மணி




No comments:

Post a Comment