Wednesday, April 08, 2009

ஸ்ரீராமின் முதல் பிறந்த நாள் SRIRAM first Birthday



நேற்று (07 ஏப்ரல் 2009) ஸ்ரீராமின் முதல் பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினோம்.

விஜயா, சதீஷ், நான் மாலை 5-30 மணிக்கு அருண் வீட்டிற்குப் போனோம். பின்னர் அதிதியும், கிருத்திகாவும் வந்தனர். 6-30 மணியிலிருந்து மற்ற உறவினர்கள் வர ஆரம்பித்தனர். பாலு மாமா, மாமி, மாமாவின் கும்பகோணம் தம்பி, தம்பி மனைவி, கிட்டா மாமா, ரேவதி, சாரதா, ஸ்ரேயா, சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், விஜயராகவன், மாமி வந்தனர். 7-30 மணிக்கு அர்விந்த் வந்தான்.


6-45க்கு ஸ்ரீராம் கேக் வெட்டினான். இசை மெழுகுவத்தி ஏற்றப்பட்டது. அருண் “பாவ் பாஜி” வாங்கிவந்தான் (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையிலிருந்து). காயத்ரி பால் பாயஸம் பண்ணினாள்.

எல்லாரும் 8-30 மணிக்கு வீடு திரும்ப ஆரம்பித்தனர். நானும், விஜயாவும் அருண் வீட்டில் சாப்பிட்டோம்.

அர்விந்த், கிருத்திகா, அதிதி ஆகியோர் இன்னொரு பிறந்தநாள் விழாவிற்கு போய்விட்டு, இரவு 9-30க்கு திரும்பினர். அவர்களுடன் நாங்களும் 9-45க்கு வீடு திரும்பினோம்.

இவ்வாறாக குழந்தை ஸ்ரீராமின் முதல் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப் பெற்றது.

ராஜப்பா (Rajappa)
08-04-2009 காலை 12-25 மணி

No comments:

Post a Comment