Friday, May 09, 2008

என்ன ஒரு அழகான பேச்சு !

What a sweet talk By Aditi and Sowmya !


ஸௌம்யாவும் அதிதியும் மழலையில் கொஞ்சுவதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் (இங்கே படிக்கவும்).

தற்போது இரண்டு குழந்தைகளுமே மிகவும் சரளமாக, கோர்வையாக, முழு முழு வாக்கியங்களாக் பேசி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார்கள். அதுவும் 4, 5 வாக்கியங்களைத் தொடர்ந்து பேசுகிறார்கள்.

நாம் எது சொன்னாலும் உடனே பிடித்துக் கொண்டு விடுகிறார்கள். அனுமார் வால் போல இடைவிடாத கேள்விகள் - "இது என்ன? நீ என்ன பண்ணறே? என்ன மாத்தரே (மாத்திரை tablet) சாப்பிடறே? ஆர் குடுத்தா? எந்த டாக்டர் மாமா குடுத்தா?" இதுபோன்று கேள்விகளுக்கு முடிவே கிடையாது.

காலை எழுந்து குளித்ததும், ஸ்வாமிக்கு முன் நின்று, "கஜாநநம் பூத கணாதி சேவிதம் ---" மற்றும் "மூஷிக வாகன மோதக ஹஸ்த --" மறக்காமல் முழுதும் சொல்லிவிடுவார்கள். "அகர முதல எழுத்தெல்லாம் -- " இதுபோன்ற சில குறள்கள் கூடத் தெரியும். "சஷ்டியை நோக்க சரவண பவனாம் -- " கற்றுக்கொண்டு வருகிறார்கள்.


அதிதிக்கும், ஸௌம்யாவிற்கும் இன்னும் இரண்டு வயசு கூட ஆகவில்லை. ஆண்டவன் குழந்தைகளை ஆசிர்வதிக்கட்டும்.

ராஜப்பா
7-45PM, 09-05-2008

No comments:

Post a Comment