அதிதியும் ஸௌம்யாவும். 
என்னுடைய பெரிய பேத்தி ஸௌம்யாவின் இரண்டாம் பிறந்த நாள் - தமிழ் நட்சத்திர (பூராடம்) பிரகாரம் நாலு நாட்களுக்கு முன்னால் மே 24-ஆம் தேதி வந்தது. (குழந்தையின் ஆங்கில முறை பிறந்த நாள் மே 17-ஆம் தேதி - இங்கே படிக்கவும்).
அன்று மாலை கோயிலுக்குச் சென்று வந்த குழந்தை எங்கள் வீட்டிற்கு வந்தாள். "இப்ப என்ன பண்ணனும், ஸௌம்யா?" என அவள் அப்பா கேட்டதும், குழந்தை ஓடி வந்து, "தாத்தா, பாட்டி"-ன்னு எங்களை கூப்பிட்டு, இருவருக்கும் விழுந்து நமஸ்காரம் பண்ணினாள் !! வியப்பிலும், மகிழ்ச்சியிலும் என் மனம் துள்ளியது. தூக்கி, உச்சிமோர்ந்து முத்தமிட்டேன். விழிக்கடையில் ஒரு முத்து முகிழ்த்தது.
கடவுள் அவளை ஆசிர்வதிக்கட்டும். God Bless Sowmya.
இளைய பேத்தி அதிதியும் நெறய்ய பேசுகிறாள். "என்ன என்ன என்ன" என்று கேள்வி மயம்தான். நேத்திக்கு (27-05-2008) அவள் இரண்டு புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டிருக்கிறாள் - "ஓஹோ", "அப்படியா".
"என்ன", "என்ன" இப்படி பல என்ன-க்களுக்குப் பிறகு, "ஓஹோ" என்று அவள் முடித்த விதம் இருக்கிறதே, சொல்லி மாளாது. (படிக்கும் நீங்களும் "ஓஹோ" என்கிறீர்களா?"
God Bless Aditi
Rajappa
11.00am 28 May 2008

என்னுடைய பெரிய பேத்தி ஸௌம்யாவின் இரண்டாம் பிறந்த நாள் - தமிழ் நட்சத்திர (பூராடம்) பிரகாரம் நாலு நாட்களுக்கு முன்னால் மே 24-ஆம் தேதி வந்தது. (குழந்தையின் ஆங்கில முறை பிறந்த நாள் மே 17-ஆம் தேதி - இங்கே படிக்கவும்).
அன்று மாலை கோயிலுக்குச் சென்று வந்த குழந்தை எங்கள் வீட்டிற்கு வந்தாள். "இப்ப என்ன பண்ணனும், ஸௌம்யா?" என அவள் அப்பா கேட்டதும், குழந்தை ஓடி வந்து, "தாத்தா, பாட்டி"-ன்னு எங்களை கூப்பிட்டு, இருவருக்கும் விழுந்து நமஸ்காரம் பண்ணினாள் !! வியப்பிலும், மகிழ்ச்சியிலும் என் மனம் துள்ளியது. தூக்கி, உச்சிமோர்ந்து முத்தமிட்டேன். விழிக்கடையில் ஒரு முத்து முகிழ்த்தது.
கடவுள் அவளை ஆசிர்வதிக்கட்டும். God Bless Sowmya.
இளைய பேத்தி அதிதியும் நெறய்ய பேசுகிறாள். "என்ன என்ன என்ன" என்று கேள்வி மயம்தான். நேத்திக்கு (27-05-2008) அவள் இரண்டு புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டிருக்கிறாள் - "ஓஹோ", "அப்படியா".
"என்ன", "என்ன" இப்படி பல என்ன-க்களுக்குப் பிறகு, "ஓஹோ" என்று அவள் முடித்த விதம் இருக்கிறதே, சொல்லி மாளாது. (படிக்கும் நீங்களும் "ஓஹோ" என்கிறீர்களா?"
God Bless Aditi
Rajappa
11.00am 28 May 2008
No comments:
Post a Comment