Sunday, May 18, 2008

ஸௌம்யாவின் இரண்டாம் பிறந்த நாள். Sowmya Birthday

ஸௌம்யா பிறந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன - இப்போதுதான் பிறந்தாள் போலத் தோன்றுகிறது, அதற்குள்ளாகவே இரண்டு ஆண்டுகளா!?
Sowmya, Birthday அவளது முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் இங்கே படிக்கவும்.

குழந்தையின் இரண்டாம் பிறந்த நாளை நேற்று (17 மே 2008) அடையாறில் (காயத்ரியின் அப்பா-அம்மா வீட்டில்) மிக விமரிசையாக் கொண்டாடினோம்.

நான், விஜயா, கிருத்திகா, அதிதி, சாவித்திரி, ரமேஷ், கார்த்திக் ஆகியோர் எங்கள் வீட்டிலிருந்து மாலை 5-45க்குக் கிளம்பிப் போனோம். அர்விந்த் அமெரிக்கா சென்றுள்ளான்; அஷோக், நீரஜா வரவில்லை. GBS பக்கத்திலிருந்து சுமார் 20 பேர் இருந்தனர்.

மாலை 6-30க்கு ஸௌம்யா கேக் வெட்டினாள். பெரிய கேக், அருண் தனது ஹோட்டலிலிருந்து ஆர்டர் செய்திருந்தான். அதிதிக்கும் கேக் வெட்ட ஒரே ஆசை! (அடுத்த மாசம் அவளது பிறந்த நாள் வருகிறது.) காயத்ரியின் அம்மா சாம்பார் சாதம், தயிர் சாதம், கோஸ் கறி, பருப்பு வடை செய்திருந்தாள். ஹோட்டலிலிருந்து அருண் காரட் ஹல்வா வாங்கி வந்திருந்தான்; விஜயா அஷோகா ஹல்வா செய்தாள்.

ஸௌம்யாவிற்கு எங்கள் பரிசாக ஒரு காது-வ்ளையம் வாங்கினோம்; 2.25 கிராம் தங்கம்; விலை 3000.00 ஆயிற்று. (அதிதியோடது 2900.00 ஆயிற்று).

இரவு 9-45க்கு நாங்கள் வீடு திரும்பினோம்; இவ்வாறாக, ஸௌம்யாவின் 2-ஆம் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினோம். குழந்தையின் தமிழ் நட்சத்திர (பூராடம்) பிறந்த நாள் மே 24-ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது.

(போட்டோக்கள் விரைவில்.)

ராஜப்பா
11:15 18-05-2008

No comments:

Post a Comment