Thursday, June 09, 2011

Aditi - Sowmya -Sriram in new academic Year 2011

அதிதியும், ஸௌம்யாவும் இந்த புதிய கல்வி ஆண்டில் (2011 ஜூன் - 2012 ஏப்ரல்) UKG சேர்ந்துள்ளனர். அதிதியின் வகுப்பு PP2 என அழைக்கப்படுகிறது.

அதிதி தன்னுடைய ஹரிஸ்ரீ வித்யாலயம் (ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது) ஸ்கூலில் படிப்பை தொடர்கிறாள். ஜூன் 8-ஆம் தேதி (புதன்) ஸ்கூல் திறந்தது. காலை 8-30 மணி துவங்கி மதியம் 2-30 வரை வகுப்புகள் இருக்கும். 10-30 க்கு சாப்பிட சின்ன சிற்றுண்டியும், மீண்டும் 12-30க்கு சாப்பிட உணவும் குழந்தை எடுத்துச் செல்கிறாள். தானே சாப்பிடுகிறாள்.

ஸ்கூலிற்கு கிளம்பும் முன்னர்,
பாட்டியுடன் சேர்ந்து ஸ்லோகம் சொல்லுகிறாள்.
காலை மணி 07:46

காலை சிற்றுண்டி, மணி 07:48


பகல் 3-15க்கு சோர்ந்து, களைத்து குழந்தை வீடு திரும்புகிறாள். பாவமாக இருக்கிறது.

ஸௌம்யாவும், ஸ்ரீராமும் OMR-ல் சிறுசேரியில் புதிதாக இந்த ஆண்டு திறக்கப்பட்ட PSBB (பத்மா சேஷாத்திரி பால பவன்) ஸ்கூலில் சேர்ந்துள்ளனர். ஜூன் 20-ஆம் தேதி திறக்கிறது. ஸௌம்யாவிற்கு ஸ்கூல் காலை 8-15க்கு துவங்கி, மதியம் 3-00 வரை இருக்கும்.

குழந்தைகள் பாவம்.

ராஜப்பா
11:15 மணி
9-6-2011

No comments:

Post a Comment